Northern Province Justices of the Peace (JP) Convention

Northern Province Justices of the Peace (JP) Convention 2019

උතුරු පළාත සාම විනිසුරුවන් (ජේපී) සම්මුතිය 2019
Northern Province Justices of the Peace (JP) Convention 2019
வட மாகாண சமாதான நீதிவான்கள்(ஜே.பி.) மாநாடு 2019

இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் சுபீட்சமான இலங்கை எனும் தலைப்பில் வடமாகாணத்திற்கான மாநாடு நேற்று 09-11-2019 சனிக்கிழமை வவுனியா அருந்ததி லக்சரி மண்டபத்தில் பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

இனஐக்கியம், சமாதானம், மனித உரிமை, நீதி என்பவைற்றை காக்கும் நோக்கில் செயற்பட்டு வரும் பேரவயைின் மாகாண ரீதியிலான மூன்றாவது மாநாடு இதுவாகும், பேரவையின் தேசிய செயலாளர் ஆசுக் றிம்சாட் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டு உரையினை பேரவையின் தேசிய பணிப்பாளர் ஆற்றினார். மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உரைகளை மத்திய மாகாண பணிப்பாளர் திரு.இளங்கோ ராம், வடமாகாண பிரதி பணிப்பாளர் சீறீஸ்கந்தராஜா அவர்களும், கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.ஹனீபா சஹீட் அவர்களும் ஆற்றினர். நிகழ்வில் கொழும்பு மாவட்ட பணிப்பாளர் சாலிஹீன், யாழ் மாவட்ட பணிப்பாளர் தினேஸ்சாந், மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம்.முர்சித் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் முசம்மில் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் சமாதான பணிகளுக்காக தங்களை அர்ப்பணித்த சமாதான நீதிவான்களுக்கு நிகழ்வில் சிறப்பு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Council of Justice of the Peace of Sri Lanka formed in Sri Lanka to serve justice., We tend to implement non-profit programs around Island and to establish and maintain peace amongst people. In essence, our Council holds the Northern Province Justices of the Peace (JP) Convention 2019 on 09-11-2019 Saturday at 3:00 pm at ArUnthathi Hall, Vavuniya to awards Justice of the Peace who involve in reconciliation in Sri Lanka.